தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச் செய்யப்பட்ட ஒன்றாகக் கூறப்படுகிறது. மைசூர் மல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும்(Nutrition value) கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி, நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது. மைசூர் மல்லி உண்பதால் ஏற்படும் நன்மைகள் (Benefits) : குழந்தைகளுக்கு(Children) உணவளிக்க ஏற்றது குழந்தைகளுக்கு...
Learn moreகாட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது தனித்துவம் (Speciality): காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits): நீரிழிவு நோய்க்கும்(Diabetis) நல்ல பலன்...
Learn moreதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. வெண்ணிறமாகக் காணப்படுகிறது பலனளிக்காத வெள்ளை(white), மற்றும் சன்ன (மெலிந்த) (Thin)இரக அரிசியை விரும்பிச் சாப்பிட நாம் பழகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரோக்கியத்துக்கு சத்து மிகுந்த மோட்டா (தடித்த) இரக அரிசியைத் தவிர்த்து, மெருகேற்றல் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நிற நெல்லில், மற்றும் வெள்ளை அரிசியுடைய இந்த நெல் இரகம், மலையும்,...
Learn moreகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக், இந்த கருங்குறுவையின் அரிசிப் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன், நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது. கருங்குறுவை நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் பூமியில் கிடந்தாலும், மக்கிப்போகாமல் ஒரு ஆண்டுக்குப் பிறகும் முளைக்கும் திறன் உடையது. கருங்குறுவை அரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள்(Benefits):...
Learn moreதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிகச் சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து...
Learn moreகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter cropping) சிறந்த ரகம். மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. 140 நாள் வயதுடைய இவ்வகை நெல்லும் அரிசியும், சிவப்பு நிறத்தில் உள்ள மோட்டா (தடித்த) ரகமாகும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், ஒரு மாதம் வரையிலும்...
Learn moreகுருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும்(Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre)அதிகம். குருவிக்கார் உண்பதால்...
Learn moreகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று .இந்திய வடமொழியில் ‘காலா நமக்’ என பெயர் பெற்றுள்ளது, ‘காலா’ → “கருப்பு”, ‘நமக்’ → “உப்பு” (Black salt) கருப்பு நிற மேலுறையோடு (உமி) காணப்படுவதால் . இப்பெயர் பெற்றிருக்கும் தனித்துவம் (Speciality): இந்தியாவின் சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது, புத்தக்(Buddha) காலமான கி. மு 6 ஆம் நூற்றாண்டு (600 BC) முதலே...
Learn moreதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் இரகமான இது, மேற்கு வங்க மாநிலத்தில்(West Bengal) இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும்(Bangladesh) இடையேயான இந்திய எல்லையின் ஓரமாக இச்சா ஆறு பாயும் (Delta region)பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்க மொழியில் வேறுபெயரில் அழைக்கப்படும் இவ்வகை நெல், பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற இரகமாகவும் உள்ள இது,...
Learn moreசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம்(Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனித்துவம் (Speciality): “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள்...
Learn more
Login with