மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை...
Learn moreகார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சௌபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது. இதனால் செய்யப்பட்ட நெய், கிரஹணி ரோகத்தை மாற்றும். சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக்...
Learn moreதிரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும். இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள்,...
Learn moreநமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் நமது மண்ணே விஷமாகி இருக்கிறது. இதனால் அந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்களின் தாக்கம் இருக்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என மத்திய வேளாண்மை அமைச்சகத்தால் அளவிடப்பட்டுள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ரசாயனங்களை உட்கொள்வதாக...
Learn moreஎங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “இங்கே இயற்கை அங்காடிகளுக்குப் பஞ்சமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இயற்கைக் காய்கறிகள் தான் போதிய அளவில் கிடைக்கவில்லை.” என்கிறார் இயற்கை அங்காடி கடை வைத்திருக்கும் ஒருவர். இயற்கை உரமிட்டு வளர்ந்த காய் கனிகளைத் தேடிச்சென்று தன்னையும், தன் குழந்தைகளையும் காக்க முற்படுகிறான் மனிதன். தவறில்லை, ஆனால் அவன் எண்ணத்திற்கும், தேவைக்கும் ஏற்ப இங்கே இயற்கை விளைபொருள்கள் கிடைக்கின்றனவா? என்றால், அழுத்தமாகவே சொல்லலாம் “இல்லை”...
Learn moreநாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காலங்களை வென்ற ஊத்துக்குளி’ நெய், ‘சேலம்’ மாம்பழம், ‘பண்ருட்டி’ பலா, ‘மணப்பாறை’ முறுக்கு… என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக...
Learn moreதமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி (Palm Jaggery) சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில்(Thiruchendur) இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள்(Palm trees) அடர்ந்த சாலையில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம். இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி(Palm Jaggery) என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும்...
Learn moreஎலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும் திரட்சியாக காணப்படும். தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் இதில் விழுந்து இறந்துவிடும். வறட்சிக்காலத்தில் கால்நடைகளுக்கு புளியங்கொட்டையின் தோலை நீக்கி பொடியாக்கி, வேக வைத்து கூழாக அளிக்க வேண்டும். ஒரு பசுவிற்கு...
Learn moreஎன்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”. இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்திப் பூ”. மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை”. இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி”, “ஓமவல்லி”. நீரிழிவு நோய் குணமாக்கும் “அரைக்கீரை”. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “மணத்தக்காளி கீரை”. உடலை பொன்னிறமாக மாற்றும் “பொன்னாங்கண்ணி கீரை”. மாரடைப்பு நீங்கும் “மாதுளம் பழம்”. ரத்தத்தை சுத்தமாகும் “அருகம்புல்”. கேன்சர் நோயை குணமாக்கும் ” சீத்தாப் பழம்”. மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளி பழம்”. நீரிழிவு நோயை...
Learn moreவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த...
Learn more
Login with