இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று. கல்யாண முருங்கை. `Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண...
Learn moreமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும். புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. பயன்கள்(BENEFITS) : சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை,...
Learn moreகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது. தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. முற்றிய இலைகளைவிட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. நார்சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. பயன்கள் (BENEFITS): பசியைத்தூண்டும். குடலை(Intestine) சுத்தப்படுத்தும். மலச்சிக்கலை (Constipation) போக்கும். பித்த மயக்கம்...
Learn moreபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. எங்கும் எளிதில் கிடைப்பது சதுரப்பிரண்டை,...
Learn moreபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை. பருப்புக் கீரையின் பயன்கள் : பாலுட்டும் (Breast Feeding) தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பித்தம் (Bile) அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு...
Learn moreதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சற்றுப் பெரிய இலைகளையும் பருத்த தண்டையும் உடைய, சற்று உயரமாக வளரும் ஒரு வகைக் கீரை. எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம். மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,...
Learn moreமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி...
Learn moreவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரை கீரையின் பயன்கள்I( BENEFITS...
Learn moreகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. கொத்தமல்லி கீரையின் பயன்கள் : கொத்தமல்லிக் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள்...
Learn moreநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும். கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக்...
Learn more
Login with