உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதிக் காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில்கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மண் பாண்டங்கள் என்பவை விலை மலிவானதாகவும், மதிப்புக் குறைந்தப் பொருட்கள் என்றவாறும் பெரும்பாலும் நினைக்கின்றனர். நவீன தொழிற்சாலைகள் அதிகரித்ததன் காரணமாக பலவித உலோக...
Learn moreஅமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்தது. இப்போது ‘டைனிங் டேபிள்’(dining table) பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதே சரியான முறை. அதுவே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று கூறுகிறார்கள். ஏன்? சம்மணமிட்டு அமரும்போது கால்கள் குறுக்காக இருக்கும். இது பத்மாசன யோகாசன நிலை போன்றது. இந்த நிலையில் மனது சாந்தமாகும். சாப்பிடும் உணவும் எளிதாக ஜீரணமாகும் என்று ஆயர்வேதம் குறிப்பிடுகிறது. சம்மணமிட்டு அமரும்போது...
Learn moreவேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ள சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.! தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.! இது வேண்டுகோள்.!!...
Learn moreஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளாவினோடின், பீட்டா-கரோட்டின் ஆகியவை ஜாதிக்காயில் நிறைந்துள்ளது. நீங்கள் ஜாதிக்காயை பயன்படுத்தும் போதெல்லாம், நீங்கள் அதில் ஓரு கைப்பிடி அளவு மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஜாதிக்காய் தூள் அதிக அளவுப் பயன்படுத்தப்படக்கூடாது. இந்திய மளிகை கடைகளில் எளிதாகக் கிடைக்ககூடியப் பொருகளில் ஒன்று ஜாதிக்காய். இது முழு மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. ஜாதிக்காய் மரத்தின் விதை, இந்தோனேசியாவில் உள்ள “மைரிஸ்டிக்ஃபராக்ஸ்”. இது...
Learn moreகிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச்...
Learn moreகடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும். கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும். கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும். கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும். கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை...
Learn moreமனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பைப் புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கசாயம் என,அதிமருதரத்தை உபயோகித்து, நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி...
Learn moreதிப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். `கணா’ என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது. இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர். பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால்...
Learn moreமூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை...
Learn more
Login with