Posted by admin
- Dec 10, 2017
- 1507
- 0
ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார். உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம்தான் இப்போதைய தேவை.
- இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.
- விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா? கம்பு, எள், கேழ்விரகு, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன.
- இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமைக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம். விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல.
- குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் எண்ண வேண்டும் என்றார்.
Tags:
Recommended Posts
- Dec 17, 2017
- 4577 read
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...
Read Article- Dec 16, 2017
- 3415 read
இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....
Read Article- Dec 15, 2017
- 2000 read
நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...
Read Article- Dec 14, 2017
- 1652 read
பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...
Read Article- Dec 13, 2017
- 3780 read
அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...
Read Article- Dec 12, 2017
- 1377 read
“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...
Read Article- Dec 11, 2017
- 1436 read
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...
Read Article- Dec 9, 2017
- 1885 read
இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...
Read Article- Dec 8, 2017
- 2127 read
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...
Read Article